நாட்டின் அநேக பகுதிகளில் கடுமையான குளிருடனான காலநிலை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இது குறித்த எதிர்வுகூறலை வெளியிட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான இடங்களில் மேக மூட்டத்துடன் வானத்தை அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா, கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் பொலனறுவை மாவட்டங்களிலும் இடைக்கிடை இடியுடன் கூடிய மழை அல்லது மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.