சீனாவில் அதிகரித்து வரும் கோவிட் பாதிப்பால் அங்குள்ள வைத்தியசாலைகளில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 13,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சீனாவில் கோவிட் தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகள் கடந்த மாதம் தளர்த்தப்பட்டது.
அப்போது முதல் கடந்த ஜனவரி 12ஆம் திகதி வரை கோவிட் பாதிப்பு காரணமாக சுமார் 60,000 பேர் வைத்தியசாலைகளில் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசாங்கம் கூறியிருந்தது.