இலங்கையில் போலி லொத்தர் சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதனால் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர் அதற்கமைய, குருநாகல் நகரில் விற்பனை செய்யப்பட்டு வந்த 232 போலி லொத்தர் சீட்டுகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
போலி லொத்தர் சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து குருநாகல் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று மாலை திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
அங்கு 232 போலி லாட்டரி சீட்டுகளை வைத்திருந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார் வாழைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த இவர் இன்று குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.