2020 ஆம் ஆண்டு நடைப்பெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டி மற்றும் பராஒலிம்பிக் போட்டி என்பனவற்றின் இலச்சினைகளை மீண்டும் ஜப்பான் ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை ஜப்பானில் 2020 நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான இலச்சினை கடந்தவருடம் வெளியிடப்பட்டு பின் ரத்து செய்யப்பட்டது.
கடந்த வருடம் தெரிவு செய்யப்பட்ட முதலாவது இலச்சினை பெல்ஜியத்தை சேர்ந்த ஓவியர் தம்மால் வரையப்பட்ட ஓவியத்தை ஒத்ததாக இருப்பதாக தெரிவித்த முறைப்பாட்டினை அடுத்தே அந்த இலச்சினை ரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.